எம்பக்கே ஆலயம்

  • கம்பளைக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட எம்பக்க ஆலயம் கண்டி மாவட்டத்தில் உடுநுவர மத்திய பகுதி திக்கெயயில் அமைந்துள்ளது.
  • 14ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த 111ஆம் விக்கிரமபாகு மன்னன் காலத்தில் தெல்மட மூலாச்சாரி உட்பட அவரது சீடர்களால் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
  • இது மேளவாத்தியக்காரர் கண்ட கனவு ஒன்றின் பிரதிபலனாக கதிர்காமக் கடவுளுக்கு அர்ப்பணிக்க நிர்மாணிக்கப்பட்டதெனக் கூறப்படுகிறது.
  • வாயில் மண்டபம், நீள்மண்டபம், கர்ப்பக்கிரகம் என்பன எம்பக்க ஆலயத்தில் காணக்கூடிய சிறப்பு அமைப்புகளாகும்.
  • எம்பக்க ஆலய மரத்தூண்களிலும் செதுக்கல் வேலைப்பாடுகளைக் காணலாம்.
  • எம்பக்க தேவாலயத்தின் கூரையில் 26 கை மரங்கள் ஒரு பலகை ஆணியுடன் பொருத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது 'மடொல் குருபாவ' என்று அழைக்கப்படுகிறது. இது இலங்கைக் கட்டக் கலைஞரின் கைவண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது. 


வாயில் மண்டபம்
  • 10 தூண்களைக் கொண்டவை.
  • ஒவ்வொரு தூணிலும் சதுர சட்டங்கள் நான்கு வீதம் உள்ளன.
  • இதற்கேற்ப 10 தூண்களிலும் 40 சதுரங்களில் செதுக்கல்கள் உள்ளன.
    நீள் மண்டபம்
    • 32 தூண்களைக் கொண்டவை. ஒவ்வொரு தூணிலும் நான்கு சதுரங்கள் வீதம் உள்ளன.
    • இங்குள்ள செதுக்கல்களின் எண்ணிக்கை 128 ஆகும்.
      எம்பக்க தேவாலயத்தின் செதுக்கல்கள் வேங்கை, சித்திரவேம்பு பலகையில் சிறுபுடைப்பு முறையில் செதுக்கப்பட்டுள்ளது.




      பிரதானமான 5 கருப்பொருள்களின் கீழ் இச்செதுக்கல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

      1. கற்பனை விலங்கு உருவங்கள்
      2. விலங்கு உருவங்கள்
      3. மனித வாழ்கையுடன் தொடர்புபட்ட செதுக்கல்கள்
      4. கரை அலங்காரம் (லீஸ்தர)
      5. பூக்கள் கொடிகள்; அலங்காரம்

      பாரம்பரியமான சிங்கள அலங்கார வடிவமைப்புக்களில் காணப்படும் சிறப்பான கற்பனை வடிவமைப்புக்களில் பல எம்பக்க ஆலய மரச் செதுக்கல் வேலைப்பாடுகளில் காணப்படுகின்றன.

      1. கற்பனையான பிராணி மற்றும் ஏனைய பிராணி ஆக்கங்கள்.
      • பேரண்டப்பட்சி
      • இரு தலைப்பட்சி
      • கின்னரப்பெண்
      • யானைப் பட்சி (எற்கந்த லிகினியா)
      • நாரிலதா
      • சரபெத்தியா
      • ரிஷப குஞ்சரம்
      2. சமகால சமூக வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்டும் செதுக்கல்கள்
      • றபான் இசைப்பவன்
      • மல்யுத்தம்
      • குதிரை வீரன்
      • நடன மாது
      • போர் வீரன்
      • குழந்தைக்குப் பாலூட்டும் தாய்.
      மேற்குறிப்பிட்ட செதுக்கல் படைப்புக்களோடு, கரை அலங்கார வடிவமைப்புக்களும் அரும்பு,கல்பித்து, குந்திரிக்கன், போன்றனவும், தாவர வடிவமைப்புகளும் - தாமரைப்பூ, பூங்கொடி போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

      கருத்துகள்