பனையோலைக் கைத்தொழில் (Palmyra Industrial Products)


பனையோலைக் கைத்தொழில் பற்றிய வீடியோ அலகினைப் பார்க்க கீழே கிளிக் செய்யுங்கள்.
  • ஒரு வித்திலைத் தாவரமாகிய பனைமரத்தின் உச்சி முதல் வேர் வரையிலான எல்லாப் பகுதிகளும் பல்வேறு ஆக்கங்களுக்காகப் பயன்படுவனவாகும்.
  • பனை மரத்திலிருந்து பெறும் ஓலையே இவ்வாக்கங்களுக்காகப் பயன்படும் பிரதானமான ஊடகமாகும்.
  • பனை மரங்கள் பரவலாகக் காணப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே குறிப்பாக பனையோலைக் கைத்தொழில் பரம்பிக் காணப்படுகின்றது. 

• பனை மரத்திலிருந்து பெறும் ஓலையே இவ்வாக்கங்களுக்காகப் பயன்படும் பிரதானமான ஊடகமாகும்.
• பனை மரங்கள் பரவலாகக் காணப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே குறிப்பாக பனையோலைக் கைத்தொழில் பரம்பிக் காணப்படுகின்றது.

பனையோலையினால் ஆக்கப்படும் பாவனைப் பொருள்களைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம். 
1. பாய், பெட்டி, கடகம் (பெரிய பெட்டி) 
2. சுளகு - உமல், கொத்து மூடல் 
3. குட்டான் (பனங்கருப்பட்டி இடும் சிறு பெட்டி)  
4. அலங்காரப் பொருள்  - சுவர் அலங்கரிப்பு

பாய்கள்

பனையோலைப் பாய் பின்னுவதில் பெண்களே பெருமளவில் ஈடுபடுவர். பனையோலைப் பாய்கள் பல்வகைப்படும்.
 விவசாய நடவடிக்கைகளின்போது, பயன்படும் பாய் 'கதிர்ப்பாய்' எனப்படும்.
 குழந்தைகளை படுக்க வைப்பதற்கு பயன்படும் சிறிய பாய் 'தடுக்கு' எனப்படும்.
 நித்திரை செய்வதற்குப் பயன்படுத்தும் பாய் 'படுக்கைப் பாய்' எனப்படும்.
 மங்கள நிகழ்வுகளுக்குப் பல வர்ணங்களில் அழகுருக்களால் உருவாக்கப்படும் பாய் 'வர்ணப் பாய்' எனப்படும். தேவைக்கேற்ப பந்திப்பாய், சோற்றுப்பாய், எச்சந்தாங்கிப்பாய் எனப் பல்வகைப்படும்.
 பனையோலைப் பாய்களில் காணப்படும் பின்னல் கோலங்கள் பல உள்ளன.

உதாரணம்: 
• புளியங்கொட்டை வடிவம் • சதுரவடிவம் • நட்சத்திர வடிவம் • விரிகோண வடிவம் • வைர வடிவம் • புள்ளி வடிவம் 
• கேத்திரகணித வடிவங்களின் இணைப்பு மூலம் கிளி, மரம், பூ, பூசாத்திரம் போன்றனவும் உள்ளன.

பாய்களுக்கு நிறமூட்டல்

• ஒரு தேக்கரண்டியளவு சாயத்துடன் ஒரு லீற்றர் நீர் சேர்த்துக் கரைத்து கொதிக்க வைத்து, அதனுள் வெட்டியெடுத்த பனையோலைகளை இட்டு ஐந்து நிமிடம் வரை அவித்தல். பின்னர், தண்ணீரில் கழுவி காற்றில் உலர வைத்தல். 
• பாரம்பரிய முறையில் கோழிச் சாயத்துடன், கறியுப்பும் கடுக்காயும் சேர்த்து அவித்து அதில் பனையோலைகளை அவித்து எடுத்தல். 
• பச்சை, சிவப்பு, நாவல் போன்ற நிறங்களை கறிமஞ்சள் தூளுடன் கலந்து ஏனைய நிறங்களைத் தயாரித்து பனையோலைக்கு நிறமூட்டல்.












கருத்துகள்